» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா நியமனம்
திங்கள் 14, ஜூன் 2021 10:46:10 AM (IST)
தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஜெ.யூ.சந்திரகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 2013ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஏற்கனவே திருப்பத்தூரில் உதவி ஆட்சியராக பணிபுரிந்துள்ளார், மேலும் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த டாக்டர் ஜெ.யூ. சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் மூன்றாவது ஆட்சியர் மட்டுமன்றி, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரும் இவர்தான்.மேலும் தென்காசி புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஆட்சியராக பணிபுரிந்து வரும் டாக்டர் கே.செந்தில்ராஜன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓபிஎஸ் உட்பட 3பேரை கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் திட்டவட்டம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 12:32:30 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் : அரசாணை வெளியீடு
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:16:50 AM (IST)

திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:27:27 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)
