» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு : அனுமதிக்கப்பட்ட சேவைகள் எவை?

சனி 22, மே 2021 4:29:09 PM (IST)

தமிழகத்தில் வருகிற திங்கள்கிழமை (மே.24) முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் தனியார், அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட சேவைகள்

* வாகனங்கள் மூலம் காய்கறிகள் , பழங்கள் வினியோகம் செய்யப்படும்.

* மருந்தகங்கள், ஏடிஎம், பெர்டேரால் பங்குகள் இயங்கும்

* உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையும், பகல் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் 9 மணி வரை பார்சல் சேவைக்கும் மட்டும் அனுமதி.

* உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கான மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும். 

* பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கலாம். 

* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றஉம், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்லு அனுமதி.

* சிகிச்சைகளுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. 

* பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும். 

* பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும். 

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட அனுமதி. 

* வேளாண் விளைபொருள்கள் மற்றும் இடுபொருள்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். 

* சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

* மின்னனு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

 * தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். 

* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். 

* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


மக்கள் கருத்து

PACKIARAJமே 23, 2021 - 03:19:47 PM | Posted IP 162.1*****

வங்கிகளில் பணிபுரிவோர் எப்படி வீட்டிலிருந்து பணிபுரியமுடியும். வங்கி சேவைகள் உண்டா ? தெளிவு படுத்தவும்.

KANNANமே 22, 2021 - 08:42:51 PM | Posted IP 162.1*****

PERIYA JAULIKADAIGALUKKU NAALAIKKU YETHARKU THADAI PODALA?

Y. இக்னேசியஸ் செல்வம்மே 22, 2021 - 05:19:38 PM | Posted IP 108.1*****

முன்னமையே சொல்லியிருக்கலாமே இன்று காலையில் கறிகடைகளிலும் மீன் கடைகளிலும் அவ்வளவு கூட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory