» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு

செவ்வாய் 18, மே 2021 4:38:47 PM (IST)

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தை http://tnmsc.tn.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக இனி இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tnmsc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனை விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் கவுன்டர்களில் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்குரிய தொகையையும் அங்கேயே செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory