» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் : தமிழக அரசு விளக்கம்
திங்கள் 17, மே 2021 5:49:34 PM (IST)
இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பதிவு முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவில், திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
kumarமே 17, 2021 - 07:04:12 PM | Posted IP 108.1*****