» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)
குற்றாலம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம், சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்தது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றையவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது .இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம், சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்தது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றையவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது .இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு
வியாழன் 28, ஜனவரி 2021 12:33:05 PM (IST)

போயஸ் கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
வியாழன் 28, ஜனவரி 2021 11:54:46 AM (IST)

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்வு செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
புதன் 27, ஜனவரி 2021 5:46:15 PM (IST)

நெல்லையில் புதிய பாலம் - சாலை விரிவாக்கப்பணி: 32 கடைகள் இடித்து அகற்றம்!!
புதன் 27, ஜனவரி 2021 5:30:28 PM (IST)

நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!
புதன் 27, ஜனவரி 2021 4:43:28 PM (IST)

ஜன. 31-ல் வைகை சிறப்பு ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 27, ஜனவரி 2021 4:33:18 PM (IST)
