» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு
சனி 23, மே 2020 7:57:59 AM (IST)
ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டையும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் தமிழக அரசின் பராமரிப்புக்கு மாற்ற அவசர சட்டத்தை பிறப்பித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அவரது சாதனைகள் மற்றும் தியாகங்களை மக்கள் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்காக அந்த அரசு நினைவிடம் திறந்து விடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் இல்லத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதே ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டது. அங்குள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட அறிவிப்பாணை 2019-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பு கடந்த 6-ந் தேதி வெளியிடப்பட்டது.
வேதா நிலைய கட்டிடங்களும், அங்குள்ள மேஜை, நாற்காலி, புத்தகங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே ஆர்ஜிதப் பணிகள் முடியும்வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசின் பராமரிப்புக்கு மாற்றிக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏதுவாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசு தனது வசம் எடுத்துக்கொண்டு, அதை நினைவிடமாக மாற்றுவதற்கான நீண்டகால செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை நிறுவும்.
இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்-அமைச்சர் இருப்பார். துணை முதல்-அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் அதன் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார். வேதா நிலையத்தை நன்றாக பராமரிக்கவும், அங்குள்ள அசையும் சொத்துகளை பாதுகாக்கவும் இந்த அறக்கட்டளை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ஆம்மே 23, 2020 - 10:54:00 AM | Posted IP 162.1*****
சீக்கிரம் மாற்றி விடுங்க , இல்லாட்டில் மன்னார்குடி திருட்டு மாபியா சசிகலா குரூப் வந்து ஆக்கிரமித்து விடுவார்கள் ... ஜெயலலிதா சொத்தையே குடும்பத்திற்கு விற்றுவிடுவார்கள் ..
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு
வியாழன் 28, ஜனவரி 2021 12:33:05 PM (IST)

போயஸ் கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
வியாழன் 28, ஜனவரி 2021 11:54:46 AM (IST)

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்வு செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
புதன் 27, ஜனவரி 2021 5:46:15 PM (IST)

நெல்லையில் புதிய பாலம் - சாலை விரிவாக்கப்பணி: 32 கடைகள் இடித்து அகற்றம்!!
புதன் 27, ஜனவரி 2021 5:30:28 PM (IST)

நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!
புதன் 27, ஜனவரி 2021 4:43:28 PM (IST)

ஜன. 31-ல் வைகை சிறப்பு ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 27, ஜனவரி 2021 4:33:18 PM (IST)

ராமநாதபூபதிமே 23, 2020 - 11:53:59 AM | Posted IP 108.1*****