» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓமனில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊர் வந்தது : வைகோ எம்பி., ஏற்பாடு
வியாழன் 21, மே 2020 6:50:14 PM (IST)
ஓமனில் இறந்த தமிழர் இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் திருவேங்கடம் வந்தது
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தினை சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த 11 மே ஆம் தேதி ஒமன் நாடு சலாலாவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.இவரது உடலை கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இராசேந்திரன் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்.அந்த தகவலை கேட்டறிந்த வைகோ எம்.பி. உடனடியாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு அவசர மின் அஞ்சல் கடிதம் அனுப்பி, உடலை கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.ஓமனில் உள்ள மதிமுக நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் இறந்துவிட்ட சாமுவேல் இளங்கோவன் குடும்பத்தினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வைகோ மேற்கொண்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் நேற்று ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.அதன்பின் அவரது உறவினர்கள் இளங்கோவனின் உடலைப் பெற்று கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சிக்கு கொண்டு வந்தனர்.
குளக்கட்டா குறிச்சிமில் இளங்கோவன் உடலை பார்த்து மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர். தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குருவிகுளம் ஒன்றிய முன்னாள் மதிமுக சேர்மன்
விசுவாமித்திரன்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் இராசாராம் பாண்டியன், மதிமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால், மதிமுக கிளைச் செயலாளர் ராஜ் உட்பட பங்கேற்றனர்.
குளக்கட்டாக்குறிச்சியில் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளங்கோவனின் உடலை ஓமானில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.

அத்துடன் இறந்துவிட்ட சாமுவேல் இளங்கோவன் குடும்பத்தினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வைகோ மேற்கொண்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் நேற்று ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.அதன்பின் அவரது உறவினர்கள் இளங்கோவனின் உடலைப் பெற்று கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சிக்கு கொண்டு வந்தனர்.
குளக்கட்டா குறிச்சிமில் இளங்கோவன் உடலை பார்த்து மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர். தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குருவிகுளம் ஒன்றிய முன்னாள் மதிமுக சேர்மன்
விசுவாமித்திரன்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் இராசாராம் பாண்டியன், மதிமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால், மதிமுக கிளைச் செயலாளர் ராஜ் உட்பட பங்கேற்றனர்.
குளக்கட்டாக்குறிச்சியில் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளங்கோவனின் உடலை ஓமானில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)

Ashokமே 21, 2020 - 11:31:21 PM | Posted IP 108.1*****