» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொரோனா சமூக பரவல் தொடங்கியதா ? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு
வியாழன் 21, மே 2020 12:58:46 PM (IST)

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வு பெற்ற பங்குதந்தையிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன் நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வந்ததாகவும், பல இடங்களில் பிரசங்கங்களுக்கும் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் எங்கெல்லாம் சென்றார், பங்குத்தந்தையை யார், யார் எல்லாம் பார்க்க வந்தனர் என்ற விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் இந்த மாத தொடக்கத்தில் 2 வாரங்களாக கொராேனா இல்லாத நிலை இருந்தது . ஆனால் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரியிடம் கேட்ட போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் கிடையாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் மக்கள் வெளிய வருவதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் போது மக்கள் சாதாரணமாக வெளியே சுற்றுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, என கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.
மக்கள் கருத்து
Tuticorianமே 21, 2020 - 01:49:58 PM | Posted IP 173.2*****
necessary precautionary steps should be taken before the situation worsens.
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)

R. Rajமே 21, 2020 - 01:55:50 PM | Posted IP 162.1*****