» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா, முதல்வர் பங்கேற்பு : தென்மண்டல ஐஜி ஆய்வு
செவ்வாய் 19, நவம்பர் 2019 8:23:09 PM (IST)

தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதால் விழா நடைபெறும் இடத்தினை தென்மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி புதிய மாவட்டம் துவக்கவிழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழா நடை பெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதற்காக தென்காசி இசக்கி மஹால் மற்றும் அதன் எதிர்புறம் உள்ள ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இதில் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடந்த பெரிய மைதானம் எனவே அந்த இடத்தில் தென்காசி முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவை நடத்தலாம் என்று அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த இடத்தை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த இடத்தைத் தேர்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த இடம் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும் என்று கருதி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் மாவட்ட துவக்க விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தென் மண்டல காவல்துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது நெல்லை சரக காவல்துறை டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனாசிங் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம் பரிந்துரை
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:41:35 PM (IST)

குடியுரிமை மசோதா நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:52:11 AM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:49:16 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கடன் தொல்லை காரணமா?
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:02:08 AM (IST)

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:48:28 AM (IST)

சென்னையில் பாத்ரூம் என நினைத்து மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 7:59:21 PM (IST)
