» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க கோரிக்கை!
சனி 15, பிப்ரவரி 2025 12:32:16 PM (IST)
சக்கம்மாள்புரம் பகுதியில் பிஎஸ்என்எல் புதிய கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய திமுக துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பல கிராமங்கள் உள்ளது. இங்கு தங்கம்மாள் புரத்தில் பிஎஸ்என்எல் உயர் செல்போன் கோபுரம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பெண்கள், வியாபாரிகள் மாணவர்கள் பலர் பிஎஸ்என்எல் செல்போன் சேவையை உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து சேர்வைக்காரன்மடம் பகுதியில் பிஎஸ்என்எல் 4G அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி வாலிபர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சக்கம்மாள்புரம் பகுதியில் புதிய கோபுரம் அமைக்கவேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் 4ஜி சேவையை நிறைவாக பயன்படுத்துவர். எனவே பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

கந்தசாமிFeb 15, 2025 - 01:51:42 PM | Posted IP 172.7*****