» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : ஆட்சியர் அழைப்பு

புதன் 27, செப்டம்பர் 2023 4:04:49 PM (IST)

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். காப்பீடு செய்ய கடைசி நாள் 29.02.2024.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிவிக்கை பெறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4930 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,203/- பிரீமியமாக செலுத்தி ரூ.84,050/- இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463/- செலுத்தி ரூ.29,250/- இழப்பீடாகவும் பெறலாம். கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். 

கடன் பெறா விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். தேவையான ஆவணங்கள்: நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம்

காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம்: வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் கேட்டுக் கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory