» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 8:42:10 PM (IST)

நாகர்கோவிலில் ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏறப்ட்டது.
நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கு திரண்டனர்.
மேலும் வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை சூப்பிரண்டு நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று)பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நடக்காது என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் ஏராளமானோர் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஜெப கூடம் கட்ட ஏற்கனவே தடை உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. இந்த செயல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால், கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஏராளமானோர் திரண்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதட்டத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)
