» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:17:38 AM (IST)

நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டதால் ஏராளமான சாலைகள் படுமோசமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது சாலைகள் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டு தெருவாரியாக சாலை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் வடிவீஸ்வரம் நடராஜபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் நேற்று இரவு சாலை போடும் பணி மும்முரமாக நடந்தது.
அப்போது ஒரு திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நின்றது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. வெகுநேரமாக அதே இடத்தில் நின்றதால், சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அவசர கதியில் கார் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் ஜல்லியை நிரப்பி சாலை போட்டனர்.
இதனை கவனித்த பொதுமக்கள் இது என்னய்யா, நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு காரை தள்ள முடியாததால் மற்ற இடங்களில் சாலை போடுகிறோம் என சாலை அமைத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கிண்டலாக மீம்ஸ் செய்து பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நாகர்கோவிலில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெகிழி கழிவு கலந்த சிமெண்ட் காங்கீரீட் பேவர் பிளாக் யூனிட்: அமைச்சர் திறந்து வைத்தார்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:51:27 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:00:32 PM (IST)

நர்ஸ் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:25:45 PM (IST)

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய்சுந்தரம் நியமனம்
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:15:31 PM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி : வாலிபர் படுகாயம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:09:37 PM (IST)

நாகர்கோவிலில் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதன் 27, செப்டம்பர் 2023 4:44:14 PM (IST)
