» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:17:38 AM (IST)

நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டதால் ஏராளமான சாலைகள் படுமோசமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது சாலைகள் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டு தெருவாரியாக சாலை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் வடிவீஸ்வரம் நடராஜபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் நேற்று இரவு சாலை போடும் பணி மும்முரமாக நடந்தது.
அப்போது ஒரு திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நின்றது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. வெகுநேரமாக அதே இடத்தில் நின்றதால், சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அவசர கதியில் கார் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் ஜல்லியை நிரப்பி சாலை போட்டனர்.
இதனை கவனித்த பொதுமக்கள் இது என்னய்யா, நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு காரை தள்ள முடியாததால் மற்ற இடங்களில் சாலை போடுகிறோம் என சாலை அமைத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கிண்டலாக மீம்ஸ் செய்து பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நாகர்கோவிலில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)
