» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 14, செப்டம்பர் 2023 3:12:16 PM (IST)

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா வ.உ. சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா வரவேற்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜையா ஆகியோருக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர் மினி பிரியா ராஜேந்திரன் கலந்துகொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் மண்டல துணைத் தலைவர் ராஜிதப்நெஸ்தார், ஜே.சி.ஐ உறுப்பினர் ஸ்டீபன் நரேஷ், பள்ளி ஆசிரியர்கள், ஜே.சி.ஐ நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)



Sharmila SubramaniSep 16, 2023 - 12:00:15 PM | Posted IP 172.7*****