» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 14, செப்டம்பர் 2023 3:12:16 PM (IST)

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா வ.உ. சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா வரவேற்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜையா ஆகியோருக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர் மினி பிரியா ராஜேந்திரன் கலந்துகொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் மண்டல துணைத் தலைவர் ராஜிதப்நெஸ்தார், ஜே.சி.ஐ உறுப்பினர் ஸ்டீபன் நரேஷ், பள்ளி ஆசிரியர்கள், ஜே.சி.ஐ நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

Sharmila SubramaniSep 16, 2023 - 12:00:15 PM | Posted IP 172.7*****