» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 14, செப்டம்பர் 2023 3:12:16 PM (IST)

கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு விழா வ.உ. சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா வரவேற்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜையா ஆகியோருக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர் மினி பிரியா ராஜேந்திரன் கலந்துகொண்டு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் மண்டல துணைத் தலைவர் ராஜிதப்நெஸ்தார், ஜே.சி.ஐ உறுப்பினர் ஸ்டீபன் நரேஷ், பள்ளி ஆசிரியர்கள், ஜே.சி.ஐ நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

Sharmila SubramaniSep 16, 2023 - 12:00:15 PM | Posted IP 172.7*****