» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாசரேத்- கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா

வியாழன் 23, மார்ச் 2023 3:36:11 PM (IST)



நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா 10நாட்கள் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முதல் நாள் மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. 9ம்திருவிழா மாலை 6மணிக்கு திருவிழா மாலை ஆராதனை வள்ளியூர் பங்குத்தந்தை நார்பர்ட் தலைமையில் நடந்தது. 

10 ம் திருவிழா மாலை6 மணிக்கு திருவிழா திருப்பலி சாத்தான்குளம் பங்குத்தந்தை ரோஜர் தலைமையில் பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் முன்னிலையில் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory