» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாங்கிய ஒரு வருடத்தில் டயர் வெடித்ததால் நுகர்வோருக்கு ரூ.17,800 வழங்க உத்தரவு!

வியாழன் 16, மார்ச் 2023 10:51:17 AM (IST)

வாங்கிய ஒரு வருடத்தில் டயர் வெடித்ததால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயர் கடை ரூ.17,800 வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையைச் சார்ந்த வழக்கறிஞர் நவரெத்தினம் என்பவர் ஒழுகினசேரியிலுள்ள டயர் கடையில் ரூ.4800 மதிப்புள்ள டயர் ஒன்று வாங்கியுள்ளார். இதற்கு 3 வருட வாரண்டி இருந்துள்ளது. ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது. ஆகவே புதிய டயர் மாற்றித் தருமாறு கடைக்காரரை அணுகியுள்ளார். ஆனால் டயர் கடை மறுத்து விட்டது. உடனே வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நவரெத்தினம் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர்; டயர் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய டயர் அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.4800,  நஷ்ட ஈடு ரூ.10000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3000 ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory