» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் : ஜி.கே.வாசன்

சனி 28, ஜனவரி 2023 7:37:16 AM (IST)

திமுக ஆட்சி மீது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்சினைகளில் கூட எந்த முடிவும் எடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக தி.மு.க. அரசு செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

வெட்கமாக இல்லைJan 28, 2023 - 10:14:48 PM | Posted IP 162.1*****

ஓட்டுக்காக திருடர்கள் கூட கூட்டணி தேவையா ?

kalimuthu kJan 28, 2023 - 01:02:43 PM | Posted IP 162.1*****

arumaiyana joke

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory