» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தம்பியை அடித்துக்கொன்ற கறிக்கடைக்காரர் : தூத்துக்குடி அருகே பயங்கரம்!

வெள்ளி 27, ஜனவரி 2023 8:25:57 AM (IST)

தூத்துக்குடி அருகே தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற இறைச்சி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே சோழபுரம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குட்டி (26). டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.  இவரது உடன் பிறந்த அண்ணன் பொன் மாடசாமி (30), கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சகோதரர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த பொன்மாடசாமி, தம்பி முத்துக்குட்டியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து, பொன் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

என்னப்பாJan 27, 2023 - 03:41:44 PM | Posted IP 162.1*****

கலியுகம் இது... கொடுமையா இருக்கு...

ஏன்Jan 27, 2023 - 03:41:01 PM | Posted IP 162.1*****

திராவிடம் பூச்சி மருந்தும்தான் விக்குது... வாங்கி குடிச்சுட்டு சாவ வேண்டித்தான...

தமிழன்Jan 27, 2023 - 08:30:47 AM | Posted IP 162.1*****

காரணம் குடிபோதை. வாழ்க திராவிடம், வாழ்க டாஸ்மாக்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory