» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா
வியாழன் 26, ஜனவரி 2023 11:53:53 AM (IST)

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய திறந்த வெளி கலையரங்கம் கட்டுவதற்கு ராஜ்யசபா எம் பி எ.விஜயகுமார் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திறந்த வெளி கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா குடியரசு தினத்தன்று (26-01-2023) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.
பெற்றோர் சங்கத்தின் தலைவர் எ.மரிய ஸ்டீபன், துணைத் தலைவர் சுந்தர், செயலாளர் செல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னாள் எம்பி விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர். இறுதியாக பள்ளியின் மூத்த ஆசிரியை பியூலா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)
