» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா
வியாழன் 26, ஜனவரி 2023 11:53:53 AM (IST)

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய திறந்த வெளி கலையரங்கம் கட்டுவதற்கு ராஜ்யசபா எம் பி எ.விஜயகுமார் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திறந்த வெளி கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா குடியரசு தினத்தன்று (26-01-2023) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.
பெற்றோர் சங்கத்தின் தலைவர் எ.மரிய ஸ்டீபன், துணைத் தலைவர் சுந்தர், செயலாளர் செல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னாள் எம்பி விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர். இறுதியாக பள்ளியின் மூத்த ஆசிரியை பியூலா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகைக்கு அடி உதை.. போலீசில் புகார்!!
புதன் 22, மார்ச் 2023 12:10:58 PM (IST)

வடக்கு தாமரைக்குளம் கோவில் வருசாபிஷேக விழா
புதன் 22, மார்ச் 2023 9:59:45 AM (IST)

நான் எந்த பெண்ணையும் மிரட்டவில்லை : பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ
செவ்வாய் 21, மார்ச் 2023 4:18:46 PM (IST)

சென்னை - குமரி இரட்டை பாதை டிசம்பரில் நிறைவு : கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 11:59:45 AM (IST)

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.3,70,167 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
திங்கள் 20, மார்ச் 2023 8:13:37 PM (IST)

பெண்களுடன் ஆபாச வீடியோ: தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் கைது!
திங்கள் 20, மார்ச் 2023 12:21:41 PM (IST)
