» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா
வியாழன் 26, ஜனவரி 2023 11:53:53 AM (IST)

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது
நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதிய திறந்த வெளி கலையரங்கம் கட்டுவதற்கு ராஜ்யசபா எம் பி எ.விஜயகுமார் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திறந்த வெளி கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா குடியரசு தினத்தன்று (26-01-2023) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.
பெற்றோர் சங்கத்தின் தலைவர் எ.மரிய ஸ்டீபன், துணைத் தலைவர் சுந்தர், செயலாளர் செல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னாள் எம்பி விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர். இறுதியாக பள்ளியின் மூத்த ஆசிரியை பியூலா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)
