» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
செவ்வாய் 24, ஜனவரி 2023 8:12:16 PM (IST)
சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மணியைச் சார்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவர் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருந்தார். பாலிச் முடிவடைந்த பின்னர் அதற்கான முதிர்வுத் தொகையை கேட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்யூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனாலும் நுகர்வோருக்கு முதிர்வடைந்த தொகையில் ஒரு பகுதி பணம் கிடைக்கவில்லை. ஆகவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திர பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூபாய் 15,000, முதிர்வுத் தொகையின் பகுதி பணமான ரூபாய் 26,916 மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 46,916 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)


.gif)
என்னJan 24, 2023 - 08:46:53 PM | Posted IP 162.1*****