» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கணவரின் தொடர்பால் விபரீதம்: 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!
வியாழன் 24, நவம்பர் 2022 4:41:47 PM (IST)
நெல்லை தேவர்குளம் அருகே கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் 1½ வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(30). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
மகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீனாவும், அவரது குழந்தையும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:28:24 AM (IST)



.gif)