» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரப்பர் கழகங்களை மூடும் முடிவை கைவிட அரசு வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
வியாழன் 24, நவம்பர் 2022 12:26:27 PM (IST)
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகங்களை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் அரசுத் துறையின் கீழ் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பெருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கீரிப்பாறை, பெருஞ்சாணி, மைலார் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டு, ரப்பர் உற்பத்தியும் பெருகிய நிலையில் 1984 முதல் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, ரப்பர் கழக நிலப்பரப்பின் பகுதிகளில் ரப்பர் பயிரிடாமல், சொத்துகளை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.
கோவை வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் உள்ள டேன் டீ அரசு தேயிலை தோட்டம், நீலகிரி கூடலூர், நடுவட்டம், குன்னூர் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, அவர்களது வாழ்வாதாரத்தை முடக்கியது போல, குமரியிலும் அதேசூழ்நிலையை உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இந்திய அளவில் தரமான ரப்பர் தயாரிக்கும் குமரி மாவட்டத்தின் சூழல் இயற்கையாகவே ரப்பர் விளைவதற்கு ஏற்றதாக இருக்கும்போது, அதை ஏன் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பின்னர் அதனை மீண்டும் பறிப்பது போல அரசு நடந்து கொள்வது நியாயமா? ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவினை கைவிட்டு, ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, ஊதிய உயர்வு கோரிக்கைகளை பரிசீலித்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)
