» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லிப்ட் கொடுப்பதுபோல அழைத்துச்சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது!
செவ்வாய் 22, நவம்பர் 2022 3:52:22 PM (IST)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை நாகர்கோவிலில் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் பின்னர் அதேபள்ளியை சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 மாணவி வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் பஸ் வசதி இல்லாததால் பைக்கில் வீட்டில் கொண்டு விடுவதாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கிரண் கருணாகரன் (43) கூறியுள்ளார்.
இதை நம்பிய மாணவி ஆசிரியரின் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லும் வழியில் மாணவிக்கு ஆசிரியர் கிரண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதை யாரிடமும் கூறவேண்டாம் என பள்ளியில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அதேவேளை, தனக்கு நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு தோழிகளிடம் கூறியுள்ளார். இதை கேட்ட சக மாணவிகள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியதுடன் போலீசிலும் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பதுங்கி இருந்த ஆசியர் கிரண் கருணாகரனை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், பெற்றோர் அளித்த புகாரை ஏற்க மறுத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர், 2 ஆசிரியைகளையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

