» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாயமான இளம்பெண் கள்ளக்காதலனுடன் தற்கொலை
செவ்வாய் 22, நவம்பர் 2022 8:06:41 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மாயமான இளம்பெண் வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை வனப்பகுதியில் கிழாக்காடு என்ற இடத்தில் வாலிபர் மற்றும் இளம்பெண் தற்கொலை செய்து பிணங்களாக கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொரடிப்பட்டு ஊராட்சி வண்டாபாடி கிராமத்தை சேர்ந்த பூபாலன் (26) என்பதும், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது.
பூபாலனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நெல் அறுவடை எந்திர டிரைவரான பூபாலன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூரை அடுத்த ஆழிக்குடி கிராமத்தை சேர்ந்த மாரி முத்து என்பவரின் மனைவி வேம்புராஜ் (24) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக் கம் ஏற்பட்டு உள்ளது. வேம்புராஜுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தால் என்ன செய்வது என்று யோசித்த பூபாலனும், வேம்புராஜும் கடந்த மாதம் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளியேறி ஊர், ஊராக சுற்றியதாக தெரிவித்தனர். இந்த கள்ளக்காதல் ஜோடி காணாமல் போன நிலையில் இருவீட்டாரும் அவர்களை தேட தொடங்கினர். இந்த நிலையில் கருமந்துறை வனப்பகுதியில் அவர்கள் இருவரும் பிணமாக கிடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்த நிலையில், இருவீட்டாரும் தேடத்தொடங்கியதால் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணினர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் விஷம் குடித்து இறந் தார்களா? அல்லது எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

அடேய் அட்மின்Nov 23, 2022 - 01:48:36 AM | Posted IP 162.1*****