» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவடத்தில் குரூப் 1 தேர்வு மையத்தில் ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு
சனி 19, நவம்பர் 2022 12:07:03 PM (IST)

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.11.2022) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு, தெரிவித்ததாவது :– தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 7331 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக 2 பறக்கும் படைகள், 6 இயக்க ஊர்திகள் (Mobile Unit) மற்றும் 22 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 22 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக் கூடங்களில் 22 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)
