» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவடத்தில் குரூப் 1 தேர்வு மையத்தில் ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு

சனி 19, நவம்பர் 2022 12:07:03 PM (IST)



ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.11.2022) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் பார்வையிட்டு, தெரிவித்ததாவது :– தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. 

இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 7331 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக 2 பறக்கும் படைகள், 6 இயக்க ஊர்திகள் (Mobile Unit) மற்றும் 22 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 22 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக் கூடங்களில் 22 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory