» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாமிரபரணி ஆற்றின் தண்ணீரில் தார்சாலை கழிவுகளை கொட்டிய அவலம்!
சனி 19, நவம்பர் 2022 10:08:43 AM (IST)

தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றில் தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி- திருநெல்வேலி இந்திய தேசிய சாலையான வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு நிறுவனம் 17ம் தேதி இரவு, தார் கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றி தாமிரபரணி ஆற்றில் கொட்டி உள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு தலைவர், மு.சுகன் கிறிஸ்டோபர் சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினார்.
மேலும் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு திருவைகுண்டம் வட்டாச்சியர் வந்து ஆய்வு செய்து, அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார். இதுபோன்று தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள்
திங்கள் 19, ஜனவரி 2026 4:39:45 PM (IST)

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)


MauroofNov 23, 2022 - 07:00:37 PM | Posted IP 162.1*****