» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குரூப் 4 மாதிரித் தேர்வில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 1, ஜூலை 2022 5:06:30 PM (IST)
நாகர்கோவிலில் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வில் பங்கேற்க குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-IV போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மூலமாக நேரடியாக தெ.தி.இந்து கல்லூரி, நாகர்கோவிலில் 17.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள வேலைநாடுநர்கள் இந்த மாதிரி தேர்வினை எழுதி பயன் பெறலாம். இந்த இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள், DECGCNGLGROUP42022 என்ற TELEGRAM CHANNEL-இல் தங்களை இணைத்துக் கொண்டு அதில் பகிரப்படும் கூகுள் லிங்-இல் தங்களது விவரங்களை 10.07.2022க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கூகுள் லிங்-இல் பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே மாதிரி தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
மேலும், இத்தேர்வின்போது பதிவுதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டு நகலினையும், (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படத்தினையும் தவறாது எடுத்து கொண்டு காலை 9 மணிக்கு முன்னதாக நாகர்கோவில் தெ.தி இந்து கல்லூரிக்கு வருகைபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைநாடுநர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.