» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குரூப் 4 மாதிரித் தேர்வில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

வெள்ளி 1, ஜூலை 2022 5:06:30 PM (IST)

நாகர்கோவிலில் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வில் பங்கேற்க குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள  தொகுதி-IV  போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும் மையம்,  நாகர்கோவில் மூலமாக நேரடியாக தெ.தி.இந்து கல்லூரி, நாகர்கோவிலில் 17.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம்                 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.  

இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள வேலைநாடுநர்கள்  இந்த மாதிரி தேர்வினை எழுதி பயன் பெறலாம். இந்த இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள்,   DECGCNGLGROUP42022 என்ற TELEGRAM CHANNEL-இல் தங்களை இணைத்துக் கொண்டு  அதில் பகிரப்படும் கூகுள் லிங்-இல் தங்களது விவரங்களை 10.07.2022க்குள்  பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இந்த கூகுள் லிங்-இல் பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே  மாதிரி தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.  

மேலும்,  இத்தேர்வின்போது பதிவுதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டு நகலினையும், (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படத்தினையும் தவறாது எடுத்து கொண்டு காலை 9 மணிக்கு முன்னதாக நாகர்கோவில் தெ.தி இந்து கல்லூரிக்கு வருகைபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   வேலைநாடுநர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory