» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொதுமக்களுக்கு இடையூறு: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

புதன் 25, மே 2022 8:38:00 PM (IST)

முதலூர் தர்மாபுரியில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றிடகோரி கிராம மக்கள் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தர்மாபுரியில் கிறிஸ்தவ சபை மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் சுப்பராயபுரம் செல்லும் சாலையோரம் டாஸ்மாக் மது பான கடை இயங்கி வருகிறது. இதில் மது அருந்தி மது பிரியர்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பது. தகராறில் ஈடுப்படுவதும் தொடர்கிறது. இதனால் அருகில் ஜெபக்கூடம் செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை மாற்றிடகோரி ஊராட்சி சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தினர். அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் இடமாற்றம் செய்யப்பாடாமல் அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. மது பிரியர்களால் பிரச்னைகளும் தொடர்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை முதலூர் டேனியல் ராஜன் உள்ளிட்ட கிராம மக்கள் நேரில் சந்சித்து, மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய கோரி முறையிட்டனர். மனுவை பெற்ற ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

மே 25, 2022 - 10:55:03 PM | Posted IP 162.1*****

அரசுக்கு துட்டு வேணும்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory