» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அருமனை அருகே டெம்போ வேன் மோதி மாணவன் பலி
புதன் 25, மே 2022 4:27:27 PM (IST)
அருமனை அருகே டெம்போ வேன் மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
குமரி மாவட்டம், அருமனை அருகே குஞ்சாலுவிளையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விச்சு 17). அருமனையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் விச்சு பனிச்சவிளை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விச்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சுதனை கைது செய்தனர்.