» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேலைகிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 25, மே 2022 11:02:22 AM (IST)

தூத்துக்குடியில் படிப்பிற்கேற்ற வேலைகிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி நந்தகோபால் புரம் 3வது தெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் பாலசுப்ரமணியன் (32). ஐடிஐ படித்துள்ளார். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் கோழி கடையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் திருமணமாகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து

adaminமே 25, 2022 - 12:43:19 PM | Posted IP 162.1*****

kadavul nambikkai venum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory