» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேலைகிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 25, மே 2022 11:02:22 AM (IST)
தூத்துக்குடியில் படிப்பிற்கேற்ற வேலைகிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி நந்தகோபால் புரம் 3வது தெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் பாலசுப்ரமணியன் (32). ஐடிஐ படித்துள்ளார். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் கோழி கடையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் திருமணமாகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
adaminமே 25, 2022 - 12:43:19 PM | Posted IP 162.1*****