» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோடி அரசு மக்களை ஏமாற்றுகிறது : திருமாவளவன் பேட்டி!

செவ்வாய் 24, மே 2022 8:43:26 PM (IST)

பா.ஜனதா கட்சி தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பா.ஜனதா தலைவர்கள் அரசியல் களத்தை தேடுகிறார்கள். அதற்காக ஆளும் கட்சியான தி.மு.க.வை சீண்டுகிறோம் என்ற பெயரில் அர்த்தம் இல்லாத விமர்சனங்களையும் முன் வைக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பெட்ரோல் விலை குறைப்பு விமர்சனம். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு முழுமையாக பொறுப்பேற்பது மத்திய அரசு தான்.

மாநில அரசு வாட் வரியை விதிப்பதால் இந்த கோரிக்கை எழுப்பப்படுகிறது. ஆனாலும் கலால் வரி, செஸ் வரி போன்றவற்றை வசூலிப்பது மத்திய அரசுதான். பிரதமர் மோடி அரசு 200 மடங்கு விலைவாசியை உயர்த்தி விட்டு, பெட்ரோல் விலையை குறைந்த அளவு குறைத்து விட்டு நாங்கள் குறைத்துவிட்டோம் என்ற தோற்றத்தை பா.ஜனதா கட்சி உருவாக்குகிறது. தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகிறது.

எனவே தமிழக அரசு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்து உள்ளதை மக்கள் அறிவார்கள். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையில் செஸ் வரியை முழுமையாக குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள அரசியல் விமர்சக தலைவர்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கை ஆகும்.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து குறித்து தமிழக அரசு புலனாய்வு துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து

யாரு ஏமாற்றுகிறது ?மே 25, 2022 - 07:23:11 AM | Posted IP 162.1*****

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும்போது அங்கே போய் கொலைகார ராஜபக்க்ஷேவிடம் எச்ச சோறுக்காக சென்று வந்த கூட்டம் தானே. விளங்காது.

Sunderமே 24, 2022 - 11:27:25 PM | Posted IP 162.1*****

😀😀😀😀

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory