» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவருக்கு அடி, உதை: போலீஸ் விசாரணை

செவ்வாய் 18, ஜனவரி 2022 9:13:00 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய மற்றொரு மினி பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). மினிபஸ் டிரைவர். இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் ஆட்களை ஏற்றிக் கொண்டு இருந்தாராம். அப்போது, முன்பு செல்ல வேண்டிய மற்றொரு மினிபஸ்சில் அதற்கு உரிய நேரத்துக்கு பிறகும் ஆட்களை ஏற்றி கொண்டு இருந்தார்களாம். 

இதனால் அந்த மினிபஸ் டிரைவர் ரூபன், கண்டக்டர் மாரிமுத்து ஆகியோரை மணிகண்டன் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ரூபன், மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

இவன்Jan 18, 2022 - 09:30:37 PM | Posted IP 108.1*****

அரசு மினிபஸ் கொண்டு வாங்கடா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory