» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நாளை குமரி வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
செவ்வாய் 18, ஜனவரி 2022 10:33:12 AM (IST)
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக நாளை (ஜன.19) புதன்கிழமை கன்னியாகுமரி வருகிறாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை மாலை தூத்துக்குடி வரும் அவா், பின்னா் அங்கிருந்து காா் மூலம் கன்னியாகுமரி செல்கிறாா். பின்னா் 20 ஆம் தேதி காலை விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா். பின்னா் பிற்பகலில் காா் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறாா். ஆளுநரின் வருகையை அடுத்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.