» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக அரசு சாலைப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

திங்கள் 17, ஜனவரி 2022 3:55:55 PM (IST)



தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சாலைப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் இன்று (17.01.2022) துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகள், குளங்கள், கால்வாய்கள், உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணிகளுக்காக பிற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் நிதியினை நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், பணிகள் முழு வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தேரோடும் ரதவீதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். தேரை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வடம் பிடித்து இழுப்பார்கள். தேரோடும் நான்கு ரத வீதி சாலைகள் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக இருப்பதாக பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், 

அக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்று தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் பணியினையும், 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பில் பூங்குளத்துவிளை சாலை சீரமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.78 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதியினை பெற்று வெகுவிரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சாலைப்பணிகளுக்கென அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்துப்பணிகளும் மிகவும் தரமானதாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியாகுமரி செயல் அலுவலர் ஜீவனாதன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.அழகேசன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா, அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுத்தலைவர் தாமரைபாரதி, குமரி ஸ்டீபன், .பசலியான், வழக்கறிஞர் சதாசிவம், முத்துசாமி, நாஞ்சில் மைக்கேல், செந்தில் முருகன், அம்மு ஆன்றோ, சந்திரசேகர், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory