» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிஷப் பிரான்கோ முல்லக்கல் விடுவிப்பு

வெள்ளி 14, ஜனவரி 2022 2:30:59 PM (IST)

கேரளத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரான்கோ முல்லக்கல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கலின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின், அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோட்டயம் நீதிமன்றம் வலுவான சாட்சியங்கள் இல்லாததால் பிரான்கோ முல்லக்கலை வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், கேரளத்தை உலுக்கிய இந்த வழக்கில் பிரான்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory