» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊராட்சி துணைத்தலைவி கணவர் மின்சாரம் தாக்கி சாவு

திங்கள் 10, ஜனவரி 2022 4:59:50 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே ஊராட்சி துணைத்தலைவி கணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

குமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர்  சந்திரசேகர் (39), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர் வெள்ளிச்சந்தை ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வீட்டில் கிரைண்டர் பழுதாகி இருந்தது. அதை நேற்று சந்திரசேகர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். 

உடனே குடும்பத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுபற்றி வெள்ளிசந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில்  போலீசார் விரைந்து வந்து சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory