» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

சனி 8, ஜனவரி 2022 11:13:49 AM (IST)

நித்திரவிளை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (56), விவசாயி. இவருடைய மனைவி புகழ்மேரி கமலம் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு வேலைக்கு எதுவும் செல்லாமல் அவர் வீட்டில் இருந்துள்ளார். அதே சமயத்தில் அவர் மது பழக்கத்திற்கும் அடிமையானதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வாழை தோட்டத்தில் செல்வன்  மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்தில் 2 மதுபாட்டில்கள், விஷ பவுடர் இருந்தது. இதனால் அவர் விஷ பவுடரை மதுவில் கலந்து குடித்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory