» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி நகர் பகுதிகளில் டிச.9ம் தேதி மின்தடை
செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:16:03 PM (IST)
தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் பல பகுதிகளில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய (விநியோகம்) செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக நாட்டுக்கோட்டை தெரு, முத்துநகர் பீச் பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் வளைவு ரோடு, பீச் ரோடு, இனிகோ நகர், ரோச் காலனி, மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண் 7வது தெரு, மாதாத் தோட்டம், பீச் ரோடு, புதிய எஸ்எஸ் வளாகம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டாரம்பட்டி உயரழுத்த மின் பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மில்லர்புரம், சின்னமணி நகர், அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெருக்கள், பால்பாண்டி நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி 5வது தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BalamuruganDec 8, 2021 - 11:14:36 AM | Posted IP 173.2*****