» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி ஒருவர் பலி : காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை!
செவ்வாய் 7, டிசம்பர் 2021 10:41:47 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் ரோடு ரோலர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி மகன் முத்துசெல்வம் (63). கோரம்பள்ளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் ஆப்ரேட்டராக வேலைபார்த்து வருகிறார். இன்று காலை பைக்கில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 3வது மைல் பாலம், எப்.சி.ஐ., குடோன் அருகே சென்றபோது, தூத்துக்குடி ஆயுதப்படை அலுவலத்தில் இருந்து எஸ்பி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் அவரது பைக் மீது மோதியது.
இதில் நிலைடுமாறி போலீஸ் வாகனத்தின் பின்சக்கரத்தின் சிக்கிய முத்து செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தினை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த மதுரை அலங்காநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜபாண்டி என்ற காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முத்துசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தென்பாகம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மக்கள் கருத்து
testDec 7, 2021 - 04:41:21 PM | Posted IP 162.1*****
Tamil
இந்த உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 12:04:08 PM | Posted IP 108.1*****
டிரைவர் காவலராக இருந்தாலும் தண்டனை கிடையாது உண்மை ..
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)


.gif)
மக்கள்Dec 8, 2021 - 11:39:00 AM | Posted IP 162.1*****