» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தொழிலதிபரின் மனைவி கள்ளக்காதலனுடன் மீண்டும் ஓட்டம்
செவ்வாய் 30, நவம்பர் 2021 11:13:13 AM (IST)
மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலனுடன் மீண்டும் இளம்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தனது மகளையும் தன்னுடைய அழைத்து சென்றிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரை தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் 1½ மாதமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த பெண் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் அந்த பெண் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தியது தெரியவந்தது.பின்னர் அந்த பெண்ணையும், அவரது மகளையும், கள்ளக் காதலனையும் மீட்டு வந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் கணவருடன் அந்த பெண் சென்றார்.
அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த பெண் மீண்டும் தற்போது மாயமாகி உள்ளார். இது அவரது கணவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் கள்ளக்காதலனுடன் அவர் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
