» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனவர்கள் 16ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : ஆட்சியர்
புதன் 13, அக்டோபர் 2021 5:39:08 PM (IST)
தெற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிடட் செய்திக்குறிப்பு: 13.10.2021 அன்று தெற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, அந்தமான் கடற்பகுதி மற்றும் கேரள கடற்பகுதிகளில் 40-50 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும், 14.10.2021 அன்று மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும்,
15.10.2021 மற்றும் 16.10.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

