» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனவர்கள் 16ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : ஆட்சியர்
புதன் 13, அக்டோபர் 2021 5:39:08 PM (IST)
தெற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிடட் செய்திக்குறிப்பு: 13.10.2021 அன்று தெற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, அந்தமான் கடற்பகுதி மற்றும் கேரள கடற்பகுதிகளில் 40-50 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும், 14.10.2021 அன்று மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும்,
15.10.2021 மற்றும் 16.10.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)