» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வாக்கிங் சென்ற பெண் பைக் மோதி பலி

புதன் 13, அக்டோபர் 2021 11:11:02 AM (IST)

தூத்துக்குடியில் வாக்கிங் சென்றபோது, பைக் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி வீரமகாளி (60), இவர் நேற்று மாலை தெற்கு பீச் ரோட்டில் வாங்கிங் சென்றபோது பின்னால் வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது மகன் ஹாஜா முகைதீன் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

DIVYA VOct 13, 2021 - 04:58:38 PM | Posted IP 162.1*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory