» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
செவ்வாய் 12, அக்டோபர் 2021 11:03:04 AM (IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய அந்த கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த சாட்டை துரை முருகனை நள்ளிரவில் நாங்குநேரி பகுதியில் வைத்து தக்கலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தக்கலைக்கு அழைத்து வந்து பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது அவரை வருகிற 25ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

