» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி: தந்தை உட்பட 2பேர் படுகாயம்

திங்கள் 11, அக்டோபர் 2021 11:41:45 AM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை படுகாயம் அடைந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற ஜெகன் (42) தொழிலாளி. இவரது மகன் ஜார்ஜ் ஜெரிஸ் (17). கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். ஜெகன் கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் கணபதிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் தனது மகன் ஜார்ஜ் ஜெரிசுடன் மோட்டார் சைக்கிளில் ஆலங்கோட்டை புறப்பட்டார். கணபதிபுரம் பகுதியில் சென்ற போது எதிரே தெக்கூரை சேர்ந்த தேவானந்த் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த தந்தை, மகன் உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் ஜார்ஜ் ஜெரிஸ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory