» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 11, அக்டோபர் 2021 11:32:54 AM (IST)
குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
TAMINADUOct 11, 2021 - 02:19:05 PM | Posted IP 173.2*****
கேரளா உங்க ஊருதானே ? பின்னாடியே போயி செட்டில் ஆகிற வேண்டியதுதானே.
ஆமாOct 12, 2021 - 08:08:37 AM | Posted IP 162.1*****