» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:30:26 PM (IST)
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காட்டைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (25). ஓட்டுநா். இவருக்கு 10 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அஜித்குமாா் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையஆய்வாளா் ஜானகி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தாா்.