» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய ரயில்வே ஊழியர் இடைநீக்கம்
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:13:03 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணியின் போது மது போதையில் இருந்த ஊழியர், பயணிகளை அவதூறாக பேசியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கெபின் டிட்ஸ் (33). இவர் நேற்று முன்தினம் மாலை டிக்கெட் கவுண்டருக்கு டிக்கெட் எடுக்க வந்த பயணிகளை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை பார்த்த பயணிகள் கெபின் டிட்ஸ் நடவடிக்கைகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து கெபின் டிட்சை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே கெபின் டிட்சை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது கெபின் டிட்ஸ் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கெபின் டிட்சை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கெபின் டிட்சை ரயில்வே அதிகாரிகள் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

