» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
ஞாயிறு 19, செப்டம்பர் 2021 9:25:29 AM (IST)
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள காந்தி நகா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் கோவில்பட்டி ஊருணி மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், ஆன்லைன் மூலம் விளையாடி தந்தையின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்ததும், இதனால் அவரது பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

adaminSep 19, 2021 - 10:14:20 AM | Posted IP 162.1*****