» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
ஞாயிறு 19, செப்டம்பர் 2021 9:25:29 AM (IST)
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள காந்தி நகா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் கோவில்பட்டி ஊருணி மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (25) என்பதும், ஆன்லைன் மூலம் விளையாடி தந்தையின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்ததும், இதனால் அவரது பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

adaminSep 19, 2021 - 10:14:20 AM | Posted IP 162.1*****