» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா!
சனி 18, செப்டம்பர் 2021 3:21:07 PM (IST)

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் புதுவாழ்வு சங்கத்தின் சமூக சேவை அமைப்பின் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வடக்கு நல்லூரில் மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊர் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், விழா ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை ஏறெடுத்து மரக்கன்றை நட்டினார். விழாவில் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன்,ஏ.சி.எஸ்.கபாடி குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:32:53 PM | Posted IP 162.1*****
Good work.
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:28:49 PM | Posted IP 162.1*****
Good work.
மேலும் தொடரும் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)


.gif)
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:36:18 PM | Posted IP 162.1*****