» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா!
சனி 18, செப்டம்பர் 2021 3:21:07 PM (IST)

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் புதுவாழ்வு சங்கத்தின் சமூக சேவை அமைப்பின் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வடக்கு நல்லூரில் மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊர் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், விழா ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை ஏறெடுத்து மரக்கன்றை நட்டினார். விழாவில் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன்,ஏ.சி.எஸ்.கபாடி குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:32:53 PM | Posted IP 162.1*****
Good work.
ப. சுகுமார்Sep 19, 2021 - 11:28:49 PM | Posted IP 162.1*****
Good work.
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

ப. சுகுமார்Sep 19, 2021 - 11:36:18 PM | Posted IP 162.1*****