» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டாறு அருகே ரூ. 2.65 கோடியில் சாலை பணி : அமைச்சா் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தாா்

சனி 18, செப்டம்பர் 2021 12:35:51 PM (IST)



திருவட்டாறு அருகே பூவன் கோடு-தாணிவிளை சாலையை சீரமைக்கும் பணியினை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா்.

சுற்றுலாத் தலமாக திகழும் மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு செல்லும் முக்கியமான சாலையான பூவன்கோடு - தாணிவிளை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை ரூ. 2.65 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை தாணிவிளை சந்திப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணியை அமைச்சா் த. மனேங்கராஜ் தொடங்கி வைத்தாா். இதில் திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜாண்சன், ஊராட்சித் தலைவா்கள் பால்சன், சலேத் கிறிஸ்டோபா், விமலா சுரேஷ், அருவிக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா், ஏற்றக்கோடு முன்னாள் தலைவா் றூஸ், வோ்கிளம்பி மேரூராட்சி முன்னாள் தலைவா் மவுண்ட்மேரி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory